இந்தியாவில் மற்றுமொரு பேரனர்த்தம்!

இந்தியாவில் பிஹார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இன்று மாலை இடிந்து விழுந்துள்ளது. அகுவானி சுல்தான்கஞ்சில் கங்கை பாலம் என இது அறியப்படுகிறது. இதுவரை இந்த பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.
    
தற்போது சமூக வலைதளங்களில் அந்த மேம்பாலம் இடிந்து விழுந்த காட்சி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சுமார் 1,717 கோடி ரூபாய் செலவில் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலம் சூறாவளி காற்றில் சேதமடைந்ததாகவும் இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!