ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதா பிக்பாஸ்? கமல், டிவி நிறுவனம் மீது வழக்குப் பதிவு!!

சமீபத்தில் வெளியான பிக்பாஸ் எபிசோட்டில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சர்வதிகாரி என குறிப்பிட்டதாக கமல்ஹாசன் மீதும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் டிவி நிறுவனம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், முதலாவது சீசன் அளவிற்கு, இந்த சீசனில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் குறை கூறிவருகின்றனர்.

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவும் பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை பார்த்து, நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், போட்டியாளர்களில் ஒருவர் சர்வதிகாரி போல நடந்து கொள்ள வேண்டும். அந்த டாஸ்க்கில், “தமிழகத்தில் கடந்த காலங்களில் சர்வாதிகாரியால் என்ன நடந்தது தெரியாது” என சக போட்டியாளர் கூறுவதாக அமைந்துள்ளது.

இதையடுத்து, இந்த டாஸ்க், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் விளம்பரத்திற்காக இதுபோன்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதாகவும், சென்னையைச் சேர்ந்த லூயிசல் ரமேஷ் என்ற வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!