எதிர்க்கட்சித் தலைவர் யார்? – இன்று மாலைக்குள் தெரியும்

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக, இருவரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்விருவரின் பெயர்கள் தொடர்பில், இன்று) மாலை கலந்துரையாடி, சபாநாயகருக்கு அறிவிப்போம் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் யாரென்பதை, திங்கிழமை மாலைக்குள் அறிந்துகொள்ளமுடியும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தி, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை, சபாநாயகர் கரு ஜயசூரிய, எழுத்துமூலமாகக் கோரியிருந்தார். அந்த கோரிக்கைக்கு அமைவாகவே பதிலளிக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!