முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்த விசாரணை அறிக்கை மொழி பெயர்க்கப்பட்டு சட்டமா அதிபரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக இதுவரை 70 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணை பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!