இந்தோனேஷியா நிலநடுக்கத்தினால் இதுவரை 347 பேர் பலி

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை 347 பேர் பலியாகியுள்ளதாவும் 1447 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 7.0 ரிச்டர் என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இனறு காலையும் குறித்த பகுதியில் 6.2 ரிச்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில், அங்குள்ள லெம்பெக் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள ஜிலி, பாலி, சும்பாவா, கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நில நடுக்கத்தின் பாதிப்பு நிகழ்ந்தது.

லெம்பெக் தீவில் கிட்டத்திட்ட 80 சதவீத கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அதே போல் ஜிலி தீவிலும் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நிலநடுக்கப் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை நிலநடுக்கத்தினால் கடந்த மூன்று நாட்களில் 347 பேர் பலியாகியுள்ளதாகவும், 1447 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனமான அண்டரா அறிவித்துள்ளது.

1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும். ஹயான்கான் என்ற பகுதியிலேயே உயிர்ழந்தோர் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல பகுதிகளில் இடிபாடுகளை அகற்றவில்லை. அங்கும் பலர் சிக்கி கிடக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஜிலி தீவில் ஏராளமான வெளிநாட்டினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!