காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன்: – ராகுல்

ஐதராபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், இது குறித்து பிரதமர் மோடி, ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், திருமணம் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சியையே தாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 2019 பொதுத்தேர்தலில் மோடி அரசை வீழ்த்துவதற்கே முன்னுரிமை கொடுப்பதாகவும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு மெகா கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக பலவேறு கட்சிகளுடன் பேசி வருவதாகவும் ராகுல் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!