கருணாநிதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற எம்.பிக்கள் மதுபோதையில் விமானத்துக்குள் தகராறு!

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு சென்ற எம்.பிக்கள் குழு மதுபோதையில் விமானத்தில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு தமிழகம் சென்றிருந்தது. இந்தக் குழு நாடு திரும்பும் போது விமானத்தில் கடும் போதையில் அட்டகாசம் செய்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு கொழும்பிற்கு வருவதற்காக இவர்கள் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். இந்த குழுவில் இருவர் நன்கு மதுபானம் அருந்தியிருந்தனர். விமானம் கொழும்பு வர தயாராக இருந்த போதும் மது அருந்த ஆரம்பித்துள்ளனர். நன்கு மது போதை தலைக்கு ஏறியதும் இவர்கள் இருவரும் விமானத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் என்ன என்பது கூட அருகில் இருந்தவர்களுக்கு புரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் மது போதையில் மயங்கியிருந்துள்ளனர். இருவரில் ஒருவர் கொழும்பை சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் மலையகத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!