இராணுவ ஆதரவுடன் முல்லைத்தீவில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்கள்! -சுரேஷ் பிரேமச்சந்திரன்

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள், சட்டவிரோதமானவை என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-

இராணுவப் பாதுகாப்புடனேயே, பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மகாவலி நீரே வரமுடியாத பிரதேசங்கள் கூட, மகாவலி அபிவிருத்திச் சபைக்கு உள்ளிட்ட காணிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையின மீனவர்களை, அங்கு தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கான அரச உதவிகளும் இராணுவ ஆதரவுகளும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான குடியிருப்புக் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வேலைத்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது?

தமிழ் மக்களின் இருப்பைக் காப்பாற்றுவதற்காக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினூடாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது. ஆனால், இன்று பெரும்பான்மையினரின் குடியேற்றத்தினூடாக, வடக்கு – கிழக்கு நிலத்தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும், இவ்விடயம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!