பன்னிரெண்டு வயது சிறுவனின் பட்டினி போராட்டம்!

பன்னிரெண்டு வயது இரான் சிறுவன் மேற்கொண்ட பட்டினி போராட்டம் ஆஸ்திரேலியாவில் காத்திரமான ஒரு கோரிக்கைக்கு காரணமாகி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள நவ்ரா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிடம் தேடும் மக்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று அரசுக்கு கெடு விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் ஆயிரகணக்கான மக்கள் நவ்ரா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!