பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டோரிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு!

கத்தோலிக்கப் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டோரிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். தேவாலயத்துக்குப் பாவ மன்னிப்புக் கோரி வரும் பெண்கள், சிறுமியர் ஆகியோரிடம், கத்தோலிக்க மதகுருக்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் போப் பிரான்சிஸ் அனைத்து கத்தோலிக்க மக்களுக்கும் இது குறித்து எழுதியுள்ள கடிதத்தில், இத்தகைய விவகாரங்களில் கவனம் செலுத்தாதிருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக போப் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!