யோகா பந்தை பயன்படுத்தி மனைவி, மகளை கொன்ற மருத்துவர்

2015-ம் ஆண்டு காரில் தாய், மகள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கொலையான பெண்ணின் கணவர் யோகா பந்தை பயன்படுத்தி கொலை செய்திருக்கிறார் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஹாங்காங் நகரில் கடந்த 2005-ம் ஆண்டு இளம்பெண் அவரது 16 வயது மகள் காரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.

அதற்கு மேலாக எந்த தடயமும் கிடைக்காததால் போலீசார் குழப்பமடைந்தனர். நீண்ட காலமாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடைந்த இந்த வழக்கில், காரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2 காற்று இறங்கிய யோகா பந்துகள் மூலமாக விசாரணை சுறுசுறுப்படைந்தது.

இது தொடர்பாக ஹாங்காங் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில் தனது அறிக்கையை அரசுத்தரப்பு சமர்பித்தது. அதில்,
காரின் பின்பகுதியில் கிடந்த அந்த இரண்டு யோகா பந்துகளிலும் கார்பன் மோனாக்சைடு வாயு இருந்ததற்கான தடையம் உள்ளது.

கொலையான பெண்ணின் 53 வயதான கணவர் ஹா கிம்-சன் ஒரு மயக்கவியல் நிபுணர், சீன பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வரும் அவருக்கு மாணவி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது தொடர்புக்கு குறுக்கே இருக்கும் மனைவியை யோகா பந்து திட்டத்தின் மூலம் கொலை செய்துள்ளார்.

ஆனால், மனைவுக்கு வைத்த குறியில் தனது மகளும் பலியாவார் என ஹா அறிந்திருக்கவில்லை. கொலை நடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வகத்தில் இரண்டு யோகா பந்துகளில் கார்பன் மோனாக்சைடு வாயுவை நிரப்பியுள்ளார்.

இது தொடர்பாக சக பணியாளர்கள் கேட்டபோது வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்வதாக ஹா கூறியுள்ளார் என அரசுத்தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விரைவில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!