அரசாங்கத்தை எவ்வாறு வீட்டுக்கு அனுப்புகின்றோம் என்பதனை வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் பாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் எங்கு இருக்கிறோம் என இவர்களுக்கு தெரியும். அத்துடன் சரியான முறையில் தேர்தல்களை அரசாங்கம் நடத்தவேண்டும். இல்லாவிடில் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்தவேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் யார் எமது வேட்பாளர் என்பதை அறிவிப்போம். அதுவரை ஏன் அவசரப்பட வேண்டும்? உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த இந்த அரசாங்கம் அச்சப்பட்டது. தற்போது மாகாண சபைத் தேர்தலை பிற்போட பாரிய தந்திரங்களை மேற்கொள்கிறது. மக்களின் இறைமையில் மிகமுக்கியமானது தேர்தலாகும். அந்தத் தேர்தல் உரிமையை தற்போது அரசாங்கம் தராமல் இருக்கிறது. அப்படியிருக்கும்போது நாங்கள் எவ்வாறு எமது வேட்பாளரை அறிவிப்பது? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!