ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை விசாரணை நிறைவடையும் வரை இம் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் உள்ளிட்டவர்களும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர், நிதி மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!