சிறுவனைத் துர்நடத்தை புரிந்து கொலை செய்த நபருக்குத் தூக்குத் தண்டனை!!

சிறுவனைப் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு இன்று தூக்குத் தண்டனை விதித்தது டுபாய் நீதிமன்று.

கடந்த வருடம் பாகிஸ்தானைச் சேர்ந்த நபரொருவர், டுபாயில் பெண் வேடமிட்டு சிறுவன் ஒருவனைப் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தி கொலை செய்தார். ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபியில் உள்ள முரூர் பகுதியில் கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கொலை செய்யப்பட்ட 11 வயதுச் சிறுவன் அஸான் மஜீத் பள்ளிவாசலுக்குச் தொழுகைக்காக சென்ற போது காணாமல் போயிருந்தான், சிறுவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, மறுநாள் சிறுவன் தங்கியிருக்கும் அடுக்கு மாடி
குடியிருப்பின் மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்டான்.

பொலிஸார் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னர்
பாகிஸ்தான் நாட்டவரான கொலையாளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 10 மாதங்களின் பின்னர் குறிப்பிட்ட நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு தூக்குத் தண்டனையும், அத்துடன் இரண்டு லட்சம் திர்ஹம் இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் எனவும் டுபாய் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!