என் மூலம் விக்னேஸ்வரனை பழிவாங்குகிறாரா சுமந்திரன்? – டெனீஸ்வரன் பதில்

??????????????????????????????????????????????????????????
என்னூடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பழி வாங்குவதாக அரசியல் மட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என வட மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தற்போது அவரது அமைச்சர்களாக இருக்கும் நால்வரும் துணை போவதாகவும் என வட மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!