மனைவியின் சித்ரவதை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்!

இந்தியாவில் மனைவியின் சித்ரவதை தாங்காமல் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுரேந்தர் குமார் தாஸ் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சுரேந்தர் விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இதனிடையில், சுரேந்தரின் மனைவி ரவீணா தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என சுரேந்தரின் சகோதரர் நரேந்தரா கூறியுள்ளார். அவர் கூறுகையில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சுரேந்தர்கும், ரவீணாவுக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த மூன்று மாதங்களிலேயே வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும் விவாகரத்து பெற விரும்புவதாகவும் சுரேந்தர் என்னிடம் கூறினார். சுரேந்தர் எங்கள் குடும்பத்தினருடன் இருப்பதை விரும்பாத ரவீணா அவரை தனியாக பிரித்து சென்று வாழ்ந்தார். எங்களிடம் சுரேந்தர் போனில் பேசினால் கூட அதை விரும்பாத ரவீணா அவரிடம் சண்டை போட்டு மனதளவில் சித்ரவதை செய்துள்ளார். இதனால் தான் சுரேந்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், ரவீணா மீது வழக்கு தொடரவுள்ளேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!