தாமதமாகும் சீன பிரதமரின் சிறிலங்கா பயணம்

சீன பிரதமர் லி கெகியாங் இந்த மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று தெரியவருகிறது. இந்த மாதம் சீன பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

எனினும், இந்தப் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்தரமுல்லவில் காணி வங்கி திறந்து வைப்பது, சீன பிரதமர் லி கெகியாங்கின் சிறிலங்கா பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்கு இந்தக் காணி வங்கி, உதவியாக இருக்கும்.

காணி வங்கி சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில், அமையவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!