வலிந்துகொண்டுவரப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தான் தெளிவான சிந்தனையுடன் கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்,

இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 91 ஆவது பிறந்தநாள் விழா யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தான் தலைவர்களுடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டு உருவாக்ப்பட்ட கூட்டணி. அது மிக விஸ்தீரணமாக மிக நீண்டகாலம் தமிழ் மக்களுக்கான போராட்டங்கள், விடுதலை நோக்கிய பாதை போன்ற மிகத் தெளிவான சிந்தனையுடன் பற்றுறுதியுடன் சென்று கொண்டிருந்தது.

அண்ணன் அமிர்தலிங்கத்தை இன்று நினைவுகூருகின்ற வேளையில் தமிழ் மக்களுக்காக விட்டுச் சென்ற கொள்கைகள் விதிகள் கோட்டுபாடுகளை நாங்கள் ஞாபகப்படுத்த வேண்டும்.

அவை பாடமாக இருக்க வேண்டும். அந்தப் பாடத்தில் இருந்து நாங்கள் எங்களைத் திருத்தி தொடர்ந்து செல்ல வேண்டும். நாங்கள் பாடம் படிக்கின்றோம். ஆனால் திருந்துவதாக இல்லை. இதனை மாற்றுவதன் மூலம் சரியான அரசியல் தீர்வு ஒன்றை பெற வேண்டும். இதற்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!