ம.பி.யில் ஆற்றுக்குள் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள சோனே ஆற்றில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் திருமணத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள சோனே ஆற்றில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் திருமணத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் ஒரு குழுவினர் திருமணத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த குழுவினர் சென்ற பேருந்து சோனே ஆற்றுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!