“பதவி நீக்கத்தின் பின்பே விசாரணையை மேற்கொள்ள வேண்டும்”

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து அதன் பின்னரே சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு விசேட பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இவ்விடயத்தில் அரசியல் பழிவாங்கல்களை விடுத்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!