ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! September 1, 2023 9:26 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானா அணிந்த 3 கவுன்கள் ஏலத்திற்கு வரவுள்ளன. அமெரிக்காவின் ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனம் ஒன்று பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் 3 கவுன் உடைகளை ஏலத்தில் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அடுத்த மாதம் 6ம் திகதி முதல் 8ம் திகதி வரை இந்த ஏலம் நடைபெறும் எனவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த 3 கவுன்களில் இளவரசி டயானா அதிக முறை அணிந்த சிவப்பு நிற கவுன் சுமார் 4 லட்சம் அமெரிக்க டொலர் வரை அதிகபட்சமாக ஏலத்தில் விலை போகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.இளவரசி டயானா விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக தொண்டு நிறுவனத்திற்காக தன்னுடைய 70 கவுன்களை 1997ம் ஆண்டு ஏலத்தில் விற்று இருந்தார்.அவற்றில் 3 கவுன்களை எலன் பெத்தோ என்ற பெண்மணி ஏலத்தில் எடுத்து இருந்தார், ஆனால் அவர் சமீபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து அவரிடம் இருந்த இளவரசி டயானாவின் ஆடைகள் தற்போது மீண்டும் ஏலத்திற்கு வந்து இருப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனேடியர் தொடர்பில் தொடர்ந்து வெளிவரும் பகீர் தகவல்கள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…