பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது! – அரசாங்கம் திட்டவட்டம்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏ-320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான ​சேவைகள் அமைச்சும் சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!