தென் பசுபிக் கடற் பிராந்தியத்தில் விமானம் வீழ்ந்து விபத்து!!!

தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள மைக்ரோனேஷியாவில் எயார் நியுகினி விமானம் இன்று அதிகாலை தனது ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எயார் நியுகினி நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானமே இவ்வாறு ஓடு பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடலில் வீழ்ந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்கள் என அணைவரும் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் யாருக்கும் எது வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு பப்புவா நியுகினியா விபத்து விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!