பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம் இன்றும் நாளையும் விசாரணை

சிறிலங்கா அதிபர் மற்றும் முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம், இன்றும் நாளையும் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்தச் சதித்திட்டம் தொடர்பாக விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், நாலக டி சில்வா இன்றும் நாளையும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நாலக டி சில்வாவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது. அவர் பலமுறை விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!