சீஷெல்ஸ் அதிபருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பிற்பகல் அந்த நாட்டின் அதிபர் டான்னி போர் ஐ சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சீஷெல்ஸ் அரச மாளிகையில் சிறிலங்கா அதிபருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு நாட்டு அதிபர்களுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்தப் பேச்சுக்களை அடுத்து. இரண்டு புதிய உடன்பாடுகளும், இரு நாட்டு அதிபர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!