கூட்டு எதிர்க்கட்சி எதுவும் கிடையாது. அனைத்துக் கட்சிகளும் கூட்டு எதிரணிதான். எங்களுடன் எவரும் இணைந்து கொள்ளலாம் இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றில் பொதுச் செயலர்கள் எவரும் இல்லை. பொதுவாகக் கோள் சொல்பவர்கள் இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்களே தலைமை அமைச்சரிடம் சென்று கட்சி தொடர்பான விடயங்களைச் சொல்லுகின்றனர். தலைமை அமைச்சரிடம் கோள் சொல்வது இந்த இரண்டு நபர்களேயாகும். நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வோம்.
ஒன்று அல்ல நூறு வழக்குத் தொடர்ந்தாலும் அஞ்சப் போவதில்லை. நீதிமன்றம் நேர்மையாகச் செயற்படுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. கூட்டு எதிர்க்கட்சி என்று ஒரு கட்சி கிடையாது. அனைத்துக் கட்சிகளும் கூட்டு எதிரணியில் இணைந்து கொள்ள முடியும். அதற்கு எந்தத் தடையுமில்லை – – என்றார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!