ரணிலுக்கு சைகை காட்டி விட்டு வெளியேறிய ஜனாதிபதி – அழைப்பை நிராகரித்தார் சம்பந்தன்!

சர்வதேச மாநாடு ஒன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றிக் கொண்டிருந்த போது எழுந்து சென்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவிருந்தார். எனினும் அவர், மாநாட்டில் பிரதான மேடையில் ஏறவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி அவசர தேவையின் நிமித்தம் மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிப்பாளர் கூறினார். ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமையினால் மன்னிப்பு கோரிய அறிவிப்பாளர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி தான் வெளியேறுவதாக பிரதமருக்கு சமிக்ஞை காட்டி விட்டு சென்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!