வடக்கு மாகா­ணத்­தில் மேலும் பல காணி­களை விடு­விக்க ஆராய்­கி­றோம்!!

வடக்கு மாகா­ணத்­துக்கு எதிர்­வ­ரும் காலங்­க­ளில் இன்­னும் அதி­க­மான, நல்ல செய்­தி­கள் வந்­து­சே­ரும். இது­வரை விடு­விக்­கப்­ப­டா­தி­ ருக்­கும் பொது­மக்­க­ளின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பில் கவ­னம் செலுத்தி வரு­கி­றோம்.

இவ்­வாறு காணி அமைச்­சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்­தார்.
புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டான சுமுக சந்­திப்பு அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்­டி­ருந்த அமைச்­சர் கயந்த கரு­ணா­தி­லக்­க­வி­டம் காணி விடு­விப்பு தொடர்­பாக உரை­யா­டி­ய­போதே அவர் இத­னைக் குறிப்­பிட்­டார்.

“வலி.வடக்­குப் பகு­தி­யில் கடந்த வாரம் 683 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன. பொது­மக்­க­ளின்­மே­லும் பல ஏக்­கர் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா“ என்று அமைச்­ச­ரி­டம் வின­வப்­பட்­டது.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்­சர் கயந்த கரு­ணா­தி­லக்க, “வடக்கு மாகா­ணத்­துக்கு எதிர்­வ­ரும் காலங்­க­ளில் இன்­னும் நல்ல செய்­தி­கள் அதி­க­மா­கவே வந்­து­சே­ரும். பொது­மக்­க­ளின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பில் ஆராய்ந்­து­வ­ரு­கின்­றோம்” என்று குறிப்­பிட்­டார்.

எதிர்­வ­ரும் காலங்­க­ளில் பொது­மக்­க­ளின் அனைத்து காணி­க­ளை­யும் விடு­விப்­பது தொடர்­பில் ஏதா­வது மதிப்­பீ­டு­களை செய்­கி­றீர்­களா என்று அமைச்­ச­ரி­டம் வின­வி­ய­போது, பதி­ல­ளித்த அவர், “பார்த்­துக்­கொண்­டி­ருங்­கள் விரை­வில் நல்­லது நடக்­கும்” என்­றார்.

வலி.வடக்­குப் பகு­தி­யில் கடந்த வாரம் 683 ஏக்­கர் பொது­மக்­க­ளின் காணி­கள் படைத்­த­ரப்­பால் விடு­விக்­கப்­பட்­டன. மேலும் வடக்கு, கிழக்­கில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்­டுள்ள காணி­களை விடு­விக்­கு­மாறு தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. பல்­வேறு பகு­தி­க­ளில் இன்­னும் பொது­மக்­க­ளின் காணி­கள் இன்­னும் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!