வடக்கு மாகாணத்துக்கு எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகமான, நல்ல செய்திகள் வந்துசேரும். இதுவரை விடுவிக்கப்படாதி ருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
புதுவருடத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுடான சுமுக சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிடம் காணி விடுவிப்பு தொடர்பாக உரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“வலி.வடக்குப் பகுதியில் கடந்த வாரம் 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின்மேலும் பல ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா“ என்று அமைச்சரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, “வடக்கு மாகாணத்துக்கு எதிர்வரும் காலங்களில் இன்னும் நல்ல செய்திகள் அதிகமாகவே வந்துசேரும். பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் பொதுமக்களின் அனைத்து காணிகளையும் விடுவிப்பது தொடர்பில் ஏதாவது மதிப்பீடுகளை செய்கிறீர்களா என்று அமைச்சரிடம் வினவியபோது, பதிலளித்த அவர், “பார்த்துக்கொண்டிருங்கள் விரைவில் நல்லது நடக்கும்” என்றார்.
வலி.வடக்குப் பகுதியில் கடந்த வாரம் 683 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் படைத்தரப்பால் விடுவிக்கப்பட்டன. மேலும் வடக்கு, கிழக்கில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு பகுதிகளில் இன்னும் பொதுமக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!