பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள் -ஆனந்­தன் எம்.பி. !!

தலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ணைந்து, விட்­டுக் கொ­டுப்­பு­டன் பணி­களை முன்­னெ­டுக்க வேண்­டும். பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நடை­பெற்று முடிந்த உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­தல்­க­ளின் பின்­னர், ஏறத்­தாழ அனைத்து சபை­க­ளுக்­கு­மான தவி­சா­ளர்­க­ளும் மேயர்­க­ளும் நகர பிதாக்­க­ளும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இந்த தேர்­தல்­கள் சட்­டம் பல்­வேறு புதிய அனு­ப­வங்­களை நாட்டு மக்­க­ளுக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் வழங்­கி­யுள்­ளது. வடக்­கு-­ கி­ழக்­கைப் பொறுத்­த­வரை, எட்டு மாவட்­டங்­க­ளும் தமிழ்த் தேசிய இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தின் கார­ண­மாக நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ மிக­வும் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

எமது உரி­மைப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துச் செல்­லும் அதே­வேளை, எமது பிர­தேச மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தும் எமது தலை­யாய கடமை. நாளாந்த விட­யங்­க­ளில் மட்­டுமே கவ­னம் செலுத்­த­வி­ருக்­கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளைச் சிலர் தமது சுய­ந­லன்­க­ளுக்­காக தேசிய இனப் பிரச்­சி­னை­யு­டன் தொடர்­பு­ப­டுத்­தி­ய­தன் விளைவே நாடு இன்று எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு மூல­கா­ர­ணம்.

எது எப்­படி இருப்­பி­னும், நடந்­த­வை­களை மறந்து, தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் எமது பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தைக் கணக்­கி­லெ­டுத்து, அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கிரா­மங்­கள், நக­ரங்­கள் ஆகி­ய­வற்­றின் அபி­வி­ருத்­தி­யில் கவ­னம் செலுத்­த­வேண்­டும்.

எமது பிர­தே­சத்­தின் அனைத்­துக் கிரா­மங்­களை சுகா­தா­ரத்­தில் தன்­னி­றைவு பெற்­ற­தா­க­வும் ஆரோக்­கி­ய­மிக்­க­தா­க­வும் மாற்­றி­ய­மைக்க முன்­வ­ர­வேண்­டும்.
முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் பட்­டி­ய­லிட்டு கூடி­ய­வ­ரை­யில் வினைத்­தி­றன் மிக்க செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதே நாம் எம்மை தேர்ந்­தெ­டுத்த மக்­க­ளுக்­குச் செய்­யும் நன்­றிக்­க­ட­னா­கும்.

அபி­வி­ருத்­திப் பணி­க­ளில் வட்­டார, கட்சி, இன, மத பேதங்­களை மறந்து சபை­க­ளில் உள்ள நிதி­களை முறை­யா­கக் கையாண்டு நீடித்­தி­ருக்­கும் அபி­வி­ருத்­திப் பணி­களை அனைத்து பிர­தே­சங்­க­ளுக்­கும் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் உறு­தி­பூண வேண்­டும்.

ஒவ்­வொரு உறுப்­பி­ன­ரும் தமக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு தாம் அளித்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்­குக் கட­மைப்­பட்­ட­வர்­கள். அதே நேரம், மிக­வும் பின்­தங்­கிய வட்­டா­ரத்­தின் வாழ்­வா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பும் விதத்­தில் அதன் உட்­கட்­டு­மான வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வது மிக­வும் அவ­சி­யம். அதை உணர்ந்து செயற்­பட முன்­வ­ர­வேண்­டும்.

கட்­சி ­ரீ­தி­யாக நாம் பிரிந்­தி­ருந்­தா­லும் நாம் தமிழ்த் தேசிய இன மக்­கள் என்­பதை நினை­விற்­கொண்டு, போரால் அழி­வ­டைந்­துள்ள எமது கிரா­மங்­களை பற்­று­று­தி­யு­டன் மீளக் கட்­டி­யெ­ழுப்ப ஒவ்­வொ­ரு­வ­ரும் உறுதி பூணு­வோம்.

இருக்­கின்ற நிதி­வ­ளங்­க­ளைக் கொண்டு உங்­கள் பணி­களை மேற்­கொள்­கின்ற அதே­நே­ரம், மேலும் சில அத்­தி­யா­வ­சிய பணி­க­ளுக்கு நிதிப்­பற்­றாக்­குறை நில­வு­கை­யில், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மூலமோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மூலமோ மேல­திக நிதி­க­ளைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு எமது பிர­தே­சத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்ப திட­சங்­கற்­பம் பூணு­வோம். இந்த விட­யத்­தில் ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி தன்­னால் இயன்ற அனைத்­தை­யும் செய்­வ­தற்­குத் தயா­ராய் இருக்­கின்­றது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­க­ளில் பலர் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கப் பல கட்­சி­க­ளில் இணைந்து போட்­டி­யிட்­டி­ருக்­கக்­கூ­டும். அவை­களை மீட்­டிப்­பார்த்து பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் அனை­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

கோர­மான வறு­மை­யி­லும், போதிய சுகா­தா­ர­மற்ற சூழ­லி­லும் வாழும் எமது மக்­களை அவற்­றி­லி­ருந்து விடு­விப்­பதே எமது தலை­யாய பணி­யாக இருக்க வேண்­டும். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் அதற்­கா­கவே நடத்­தப்­ப­டு­கின்­றன. போட்­டி­யிட்ட ஒவ்­வொ­ரு­வ­ரும் அந்த நோக்­கத்­துக்­கா­கவே போட்­டி­யிட்­டீர்­கள். எமது மக்­கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்ற உறு­தி­பூ­ணு­வோம்- என்­றுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!