‘றோ’ வின் ஈடுபாடு குறித்து எதுவும் கூறவில்லை – சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் எந்தவொரு ஈடுபாடு தொடர்பாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடவில்லை என்று, அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தின் பின்னணியில், இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாக வெளியான செய்திகளை அடுத்து, நேற்றுமாலை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!