புலிகளுக்கு நஷ்டஈடா? – பொங்குகிறார் வீரவன்ச

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க முன்வராத அரசாங்கம் சர்வதேச நிபந்தனைக்கு அமைய புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கப் போகிறது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிதிச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், முட்டாள் தனமான பொருளாதார கொள்கைகளின் மூலமாகவே இன்று நாட்டின் ரூபா வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் எமது நாட்டின் சாதாரண தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பை கண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!