நானே சிறிலங்காவின் பிரதமர் – என்கிறார் ரணில்

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தானே இப்போதும் பிரதமராக இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை சிறிலங்கா பிரதமராக மகிந்த ராஜபக்சவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டின் பிரதமராக தான் இன்னமும் பதவியில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்றும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!