மகிந்த தரப்பிற்கு தாவுவோரிற்கு பல மில்லியன்களாம்- வெளியானது புதிய தகவல்

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியுகோ சுவையர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச தரப்பிற்கு ரணில்விக்கிரமசிங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை ஊக்குவிப்பதற்காக மில்லியன் பவுனட்ஸ்கள் வழங்கப்படுவதாக வதந்திகள் வெளியாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் சீனாவின் பங்களிப்பு குறித்து சர்வதேச சமூகம் அச்சமடையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களிற்கு முன்னர் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஹியுகோ சுவையர் இலங்கை நிலவரம் குறித்து ஆழ்ந்த கரிசனை வெளியிட்;டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!