இன்று முதல் அமுலுக்கு வருகிறது ஈரான் மீதான பொருளாதார தடை

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையானது இன்று முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொது மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் இந்த பொருளாதார தடையின் மூலமாக ஈரனின் எணணெய் ஏற்றுமதி, வங்கி சேவைகள், கப்பல் நிறுவனங்கள், விமான சேவை உள்ளிட்ட 700 வகையான பாதிப்புகள் ஏற்படும்.

மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய நிறுவனங்கள் ஈரானில் இருந்து வெளியேறும். அதன் காரணமாக ஈரான் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும்.

ஆகவே அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தெக்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி அமெரிக்காவுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பியதுதடன் மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த தடையை ஏற்க மறுத்த இவர்கள் ஈரானுடனான வர்த்தகத்தை டாலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!