சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேவிபி தலைவர்களுடன் நேற்று பிற்பகல் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, சிறிலங்கா அதிபரை இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை வரும் 14ஆம் நாள் கூட்டுவதற்கு சிறிலங்கா அதிபர் முடிவெடுத்த நிலையில், முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இறுதி சமரச முயற்சியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

எனினும், இந்தச் சந்திப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!