நாடாளுமன்ற கலைப்பு – உண்மையில்லையாம்

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்கள் செய்திகளைப் பரப்பி வருகின்றன.

இந்தச் செய்திகளில் உண்மையில்லை என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் வலியுறுத்திக் கூறுகிறது.

இந்த போலியான, அடிப்படையற்ற வதந்திகளை அரசாங்கம் முற்றாக மறுக்கிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!