சிறிலங்காவில் ஜனநாயகத்துக்காக மெழுகுவர்த்தி போராட்டம்

சிறிலங்காவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும்- நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.

கங்காராமய விகாரைக்கு அருகே நேற்று மாலை நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்கு செய்திருந்தது.

இந்தப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, ருவான் விஜேவர்த்தன, ரோசி சேனநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!