குருநாகலவில் மீண்டும் களமிறங்குகிறார் மகிந்த

வரும் ஜனவரி 05ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

பொதுஜன முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன, இந்தத் தகவலை தெரிவித்தார்.

“பல்வேறு மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. எனினும், அவர் கடந்தமுறை போட்டியிட்ட குருநாகல மாவட்டத்திலேயே போட்டியிடுவார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!