அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தல்

புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் 49 அமைச்சர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே, சிறிலங்கா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில், அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

அதேவேளை, பெரும்பாலான அமைச்சர்கள் தற்போதுள்ள அமைச்சரவையில் கொண்டிருக்கும் பதவிகளையே தக்கவைத்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!