சம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

நாளை பிற்பகல் 5 மணிக்கு அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கவே, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு சிறிலங்கா அதிபர் அழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!