நீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார்.

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு முன்னதாக கோட்டே நீதிவான், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

நேற்று, அவருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், அந்த விசாரணைக்கு முன்னிலையாகாத, அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இன்று நீதிமன்றில் முன்னிலையாகி சரணடைந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!