அரச துறையினரின் சம்பள விவகாரம் ; மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து பரிந்துரைகள் முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த இந்த மீளாய்வு அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரணுக்கே ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அரச துறையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சுற்று நிரூபங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி அரச துறையினரின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் காணப்படுமாயின், அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!