ஐதேகவின் வாயை அடைக்க பிணைமுறி அறிக்கையை வெளியிடத் திட்டம்!

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வாரங்களில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியே வரும்போது யார் யார் இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்று தெரிந்துக்கொள்ள முடியும். தற்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குறித்த விடயம் வெளியிடப்பட்டவுடன் இந்த ஆர்ப்பாட்டங்களை நிறுத்தி விடுவர். இதன் காரணமாகவே ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன தெரிவித்தாகவும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!