அரசியல் நெருக்கடிக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு – சிறிலங்கா அதிபர்

மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் செயற்பட இடைக்கால தடைவிதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது பிரதமரோ, அரசாங்க கிடையாது. அதற்கமைய, அடுத்த 24 மணி நேரத்துக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!