ஐ.தே.க. குறித்து பேச பொன்சேகாவிற்கு தகுதியில்லை – ஜயந்த வகும்பர

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்படும் எவ்வித தகுதிகளும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு கிடையாது. தேர்தலில் தோல்வியடைந்து தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் இன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை விமர்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வகும்பர தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கு பயம் இல்லை என்றால் பொதுத்தேர்தலுளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுக்களை மீளபெற்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேசிய கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகிவயலாளர் சந்திப்பில் கலநதுக் கொண்டுங கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!