இன்றிரவு கூடுகிறது சுதந்திரக் கட்சியின் செயற்குழு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக, கட்சியின் செயலர் பேராசிரியர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில், இன்று மாலை 7 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்று கட்சியின் செயலர் பேராசிரியர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!