அரசியல் கைதிக்கு ‘பரோல்’!

கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான ரஞ்சித்(35) ஒரு வாரகால நீதிமன்ற பரோலில் (நிபந்தனையின் அடிப்படையில் தற்காலிக விடுவிப்பு) தனது இல்லத்திற்கு வந்திருந்து மீண்டும் நேற்று சிறைக்குத் திரும்பினார்.

கிளிநொச்சி புளியங்குளத்தைச் சேர்ந்த இவர் 2007 இல் படகு மூலம் மாலைதீவுக்குச் சென்றபோது அங்கு கைது செய்யப்பட்டுத் திருப்பியனுப்பப்பட்டார். அன்றுமுதல் அரசியல் கைதியாகச் சிறையிலிருக்கும் அவர் நன்னடத்தை அடிப்படையில் கடந்த 30 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவர் வீடு வருவதற்கான ஏற்பாடுகளை மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!