வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை!

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்தில் தன்னால் தீர்வு வழங்க முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தாமதம் அடைந்துள்ளமையால், சொன்னபடி தீர்வு வழங்க முடியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேற்று இரவு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!