சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, விடுதலை புலிகள் இயக்க போராளிகளை சட்டத்திற்கு முரணாக விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார்.
தேசிய கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகள் என்று குறிப்பிடுபவர்களை விடுதலை செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இந் நிலையில் தமக்கு ஆதரவளித்தால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரணில் குறிப்பிட்டுள்ளமையாது பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!