சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மூவர் ஆளும்கட்சிக்கு தாவினர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய சற்று நேரத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஸ்மன் செனிவிரத்ன ஆகியோர், ஆளும்கட்சி வரிசையில் சென்று அமர்ந்து கொண்டனர்.

முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 21 பேரும் எதிர்க்கட்சியில் அமர வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

எனினும், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆளும்கட்சிக்குத் தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!